நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

யோர்தான் நதியோரம் திகையாதே மனமே

Yorthaan Nathiyoram Thikaiyaathae Manamae

யோர்தான் நதியோரம் திகையாதே மனமே

யோசனையாலுன்னை கலக்காதே உள்ளமே

வெள்ளம் பெருகினும் வல்லமை குன்றாதே

வல்லவர் வாக்கொன்றும் மாறிப்போகாதே

வல்லவர் வாக்கொன்றும் மாறிப்போகாதே

வைப்பாயுன் காலடி தற்பரன் சொற்படி

வானவர் இயேசு தம் வாக்கு மாறாரே

வானவர் இயேசு தம் வாக்கு மாறாரே

உன்னத மன்னனே உண்டு முன்னணியில்

துன்பமணுகாமல் துணையருள்வாரே

துன்பமணுகாமல் துணையருள்வாரே

கானான் ஓரமே காதலன் நாடதே

காணுவேன் தேசம் ஆ! என்ன இன்பமே

காணுவேன் தேசம் ஆ! என்ன இன்பமே

பால் தேனும் ஓடுதே பூரண அன்பதே

பாட்டினாலே அதை பகரலாகாதே

பாட்டினாலே அதை பகரலாகாதே

ஜெபத்தினால் வல்லமை

ஜெயம் பெற்றோர் நாடதே

ஜோதியின் வஸ்திரம் தரித்திடலாமே

ஜோதியின் வஸ்திரம் தரித்திடலாமே