பாடல்
யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
Yootha Raajasingam Uyirththelunthaar
யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்
வேதாள கணங்கள் ஓடிடவே
ஓடிடவே உருகி வாடிடவே
– யூத
வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே பரனைத் துதித்திடவே
– யூத
மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறி பட்டன நொடியில் முறிபட்டன
– யூத
எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே
எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே
– யூத
மாதர் தூதரைக் கண்டக மகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார்
– யூத
மரித்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை இனி மரிப்பதில்லை
– யூத
கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம் பதத்தை சிரமணிவோம்
– யூத