இயேசுவை போல் அழகுள்ளோர்
Yesuvai Pol Alakullor
Sirkali Yesuprakasam
இயேசுவை போல் அழகுள்ளோர்
யாரும் இல்லை இப்பூவினில்
இதுவரை கண்டதில்லை
காண்பதும் இல்லை
பூரண அழகுள்ளவரே பூவினில்
எந்தன் வாழ்க்கை அது
நீரே போதும் வேறே வேண்டாம்
எந்தன் அன்பர் இயேசுவே
மண்ணுக்காக மாணிக்கத்தை
வீட்டிட மாட்டேன் (வெறும் ) -2
சம்பூரண அழகுள்ளோர்
என்னை மீட்டு கொண்டீரே
சம்பூரணமாக என்னை
உந்தனுக்கு ஈந்தேன்
பூரண அழகுள்ளவரே பூவினில்
எந்தன் வாழ்க்கை அது
– நீரே போதும்
லோக சுகம் மேன்மையெல்லாம்
எந்தனை கவர்ச்சித்தால்
பாவ சோதனைகள் எல்லாம்
என்னை சோதித்தால்
பூரண அழகுள்ளவரே பூவினில்
எந்தன் வாழ்க்கை அது
– நீரே போதும்
நீர் மேல் மோதும் குமிழி போல
மின்னும் ஜட மோகமே
என் மேல் வந்து வேகமாக
மோதி அடித்தால்
பூரண அழகுள்ளவரே பூவினில்
எந்தன் வாழ்க்கை அது
– நீரே போதும்
தினந்தோறும் உம்மில் உள்ள
அன்பு என்னில் பொங்குதே
நேசர் நீர் வேகம் வந்து
என்னை சேருமே
பூரண அழகுள்ளவரே பூவினில்
எந்தன் வாழ்க்கை அது
– நீரே போதும்