பாடல்
இயேசு போல் ஓர் நேசர் உண்டோ
Yesu Pol Or Naesar Unntoo
இயேசு போல் ஓர் நேசர் உண்டோ
நம் மாசு துயர் தாங்கிட
வாஞ்சை நிறைவேற கெஞ்ச
தஞ்சம் அவர் போலுண்டோ
நெஞ்சம் சாந்தியை இழந்து
சஞ்சலமே கொள்வதேன்
கர்த்தரிடம் யாவும் கூற
நித்தமும் மறந்ததேன்
சோதனையோ வீண் தொல்லையோ
பாதையெங்கும் அல்லவோ
சோர்ந்து போகா நெஞ்சத்துடன்
சேர்வாய் அவர் பாதமே
வேதனையில் பங்கு கொள்ளும்
வேறே நேசர் யாருண்டு
இயேசு யாவும் அறிவாரே
பேசு அவரிடமே
பலவீனமோ தாங்கொண்ணா
கவலையின் பளுவோ
தஞ்சம் தரநேசருண்டு
சஞ்சலத்தைக் கொட்டிடு
நண்பர் கைவிட்டாரோ உன்னை
அண்டிக்கொள் இயேசுவையே
அணைப்பாரே உன்னை மார்பில்
துணை என்றும் நானென்பார்