இயேசு நம்பி தான் நான் வாழ்ந்திருக்கேன்
Yesu Nampi Thaan Naan Vaalnthirukkaen
Sirkali Yesuprakasam
இயேசு நம்பி தான் நான்
வாழ்ந்திருக்கேன் அவர்
பேச்சை நம்பித்தான் நான்
வளர்ந்திருக்கேன் இயேசு
வாக்குத்தத்தம் என் நெஞ்சிலே அது
வந்து வந்து தேத்தும்மா
தாய் என்னை மறந்தாலும் இயேசு
நான் உன்னை மறவேன் என்றார்
தந்தை என்னை வெறுத்தாலும்
என் இயேசு தாங்கி சுமப்பேன் என்றார்
பந்தங்கள் சொந்தகள் பாரினில் மாறிடும்
பரமன் இயேசுவோ என்றென்றும் மாறிடாரே
– இயேசு
உலகம் முடிவு பரியந்தம் நான்
உன்னோடு இருப்பேன் என்றார்
இந்த உலகம் தரக்கூடாத சமாதானம்
உன்னிலே வைப்பேன் என்றார்
உன் மேல் என் கண்ணை வைத்து
ஆலோசனை சொல்வேன் என்றார்
உன்னை நான் ஒரு போதும்
கைவிட மாட்டேன் என்றார்
– இயேசு
காலங்கள் மாறிவிடும் என் இயேசு
கர்த்தரோ மாறமாட்டார்
கோலங்கள் அழிந்து விடும்
என் இயேசு
கொள்கையோ நிலைத்து நிற்கும்
வானமும் பூமியும் ஒருநாள்
ஒழிந்திடும்
தேவனின் வார்த்தையோ
எந்நாளும் ஒழிவதில்லை
– இயேசு