பாடல்
இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார்
Yesu Nam Pinnikalai Aettuk Konndaar
Fr. S. J. Berchmans
இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார்
நம் நோய்களைச் சுமந்து கொண்டார்
நம் பாவங்களுக்காய் காயப்பட்டார்
அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார்
நம்மை நலமாக்கும் தண்டனை
அவர் மேல விழுந்தது
அவருடைய காயங்களால்
குணமடைந்தோம் நாம்
– இயேசு நம்
கொல்வதற்காய் இழுக்கப்படும்
ஆட்டுக்குட்டியைப் போல மயிர்
கத்திரிப்போன் முன்னிலையில்
கத்தாத செம்மறி போல
வாய்கூட அவர் திறக்கவில்லை
தாழ்மையுடன் அதை தாங்கிக் கொண்டார்
அவருடைய காயங்களால்
குணமடைந்தோம் நாம்
– இயேசு நம்
நம் பாவம் அனைத்தும் அகற்றி விட்டார்
இறைவனின் பிள்ளையாய் மாற்றிவிட்டார்
கழுமரத்தின் மீது தன் உடலில்
நம் பாவங்கள் அவர் சுமந்தார்
அவருடைய காயங்களால்
குணமடைந்தோம் நாம்
– இயேசு நம்