இயேசு என்றதுமே எனக்கு ஒரு இன்பம் பிறக்குதம்மா
Yesu Entathumae Enakku Oru Inpam Pirakkuthammaa
Sirkali Yesuprakasam
இயேசு என்றதுமே எனக்கு ஒரு
இன்பம் பிறக்குதம்மா
காசினியிள்ளவர் போல் எவரையும்
கண்டதில்லையம்மா
பேச தொடங்கினாலும்
பேச்செல்லாம் பேரின்பம் சொட்டுதம்மா
பார்க்கத்தொடங்கினாலும் பார்வையெல்லாம்
பாவியில் இல்லையம்மா
குஷ்ட ரோகிகளை கைகளால்
கூசாமல் தொட்டாரம்மா
கஷ்டப்படுவோரைக் கண்டதும்
கண்ணீர் வடித்தாரம்மா
கஷ்டப்படுவோரைக் கண்டதும்
கண்ணீர் வடித்தாரம்மா
காசு மேல் ஆசை வைத்து
தம்மை தான் காட்டிக் கொடுத்தவனின்
காசு மேல் ஆசை வைத்து
தம்மை தான் காட்டிக் கொடுத்தவனின்
ஆரத் தழுவினோரை காசினியில்
கண்டதும் உண்டோ அம்மா
ஆரத் தழுவினோரை காசினியில்
கண்டதும் உண்டோ அம்மா
– இயேசு
சிலுவை மீதினிலே இரத்தத்தை
சிந்தி மடிந்தாரம்மா
சிலுவை மீதினிலே இரத்தத்தை
சிந்தி மடிந்தாரம்மா
உலகை மீட்டிடவே இயேசு வந்து
உவந்து மாண்டாரம்மா
உலகை மீட்டிடவே இயேசு வந்து
உவந்து மாண்டாரம்மா
எங்கு நான் சென்றிடுவேன்
இவ்வன்பை எவ்விதம் சொல்லிடுவேன்
எங்கு நான் சென்றிடுவேன்
இவ்வன்பை எவ்விதம் சொல்லிடுவேன்
பங்கம் பல வரிணும் அவர்க்காய்
பாடுகள் பல பட்டிடுவேன்
பங்கம் பல வரிணும் அவர்க்காய்
பாடுகள் பல பட்டிடுவேன்
– இயேசு