நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசு என்றதுமே எனக்கு ஒரு இன்பம் பிறக்குதம்மா

Yesu Entathumae Enakku Oru Inpam Pirakkuthammaa

Sirkali Yesuprakasam

இயேசு என்றதுமே எனக்கு ஒரு

இன்பம் பிறக்குதம்மா

காசினியிள்ளவர் போல் எவரையும்

கண்டதில்லையம்மா

பேச தொடங்கினாலும்

பேச்செல்லாம் பேரின்பம் சொட்டுதம்மா

பார்க்கத்தொடங்கினாலும் பார்வையெல்லாம்

பாவியில் இல்லையம்மா

குஷ்ட ரோகிகளை கைகளால்

கூசாமல் தொட்டாரம்மா

கஷ்டப்படுவோரைக் கண்டதும்

கண்ணீர் வடித்தாரம்மா

கஷ்டப்படுவோரைக் கண்டதும்

கண்ணீர் வடித்தாரம்மா

காசு மேல் ஆசை வைத்து

தம்மை தான் காட்டிக் கொடுத்தவனின்

காசு மேல் ஆசை வைத்து

தம்மை தான் காட்டிக் கொடுத்தவனின்

ஆரத் தழுவினோரை காசினியில்

கண்டதும் உண்டோ அம்மா

ஆரத் தழுவினோரை காசினியில்

கண்டதும் உண்டோ அம்மா

– இயேசு

சிலுவை மீதினிலே இரத்தத்தை

சிந்தி மடிந்தாரம்மா

சிலுவை மீதினிலே இரத்தத்தை

சிந்தி மடிந்தாரம்மா

உலகை மீட்டிடவே இயேசு வந்து

உவந்து மாண்டாரம்மா

உலகை மீட்டிடவே இயேசு வந்து

உவந்து மாண்டாரம்மா

எங்கு நான் சென்றிடுவேன்

இவ்வன்பை எவ்விதம் சொல்லிடுவேன்

எங்கு நான் சென்றிடுவேன்

இவ்வன்பை எவ்விதம் சொல்லிடுவேன்

பங்கம் பல வரிணும் அவர்க்காய்

பாடுகள் பல பட்டிடுவேன்

பங்கம் பல வரிணும் அவர்க்காய்

பாடுகள் பல பட்டிடுவேன்

– இயேசு