பாடல்
யெஷீவா யெஷீவா என்ற நாமம்
Yesheevaa Yesheevaa Enta Naamam
Ravi Bharath
யெஷீவா யெஷீவா என்ற நாமம்
உனக்கும் எனக்கும் போதும் போதும்
இனிமையான நாமம்-ஒரு
இணையில்லாத நாமம்
முழங்க்கால்கள் மடங்கிடும் நாவுகள்
சொல்லிடும் அனைவரும் தொழுதிடும்
நீதியின் சூரியனே நீரே நாயகனே
ஏழையின் காவலனே யெஷீவா யெஷீவா
பரமனின் பிள்ளைகளை காணவே
சிலுவையில் மரித்தவரே
உயிரோடு எழுந்தவர் ஆதலால்
மரணத்தை ஜெயித்தவரே
– யெஷீவா
கிருபையில் பூரணரே சிருஷ்டிப்பின் காரணரே
மூன்றில் ஒன்றானவரே யெஷீவா யெஷீவா
பாரங்களை சுமந்திடும் சிநேகிதன்
பரமனின் தவ புதல்வன்
பாவங்களை அகற்றிடும் நாயகனே
மகிமையிலே முதல்வன்
– யெஷீவா
ஆதியில் இருந்தவரே ஆவியில் நிறைந்தவரே
ஆத்தும இரட்சகரே யெஷீவா யெஷீவா
ஒப்புரவை உண்டு பண்ணும்
வேலையை திப்புரவாய் முடித்தவரே
முன் குறிக்கப்பட்ட வரை மீட்கவே
ஜீவனை கொடுத்தவரே
– யெஷீவா