பாடல்
யார் பிரிக்க முடியும் நாதா
Yaar Pirikka Mutiyum Naathaa
Fr. S. J. Berchmans
யார் பிரிக்க முடியும் நாதா
உந்தன் அன்பிலிருந்து தேவா
என் சார்பில் நீர் இருக்க
எனக்கெதிராய் யார் இருப்பார்
மகனையே நீர் தந்தீரய்யா
மற்ற அனைத்தும் தருவீர் ஐயா
… யார் பிரிக்க
தெரிந்துகொண்ட உம் மகன் (மகள்) நான்
குற்றம் சாட்ட யார் இயலும்
நீதிமானாய் ஆக்கிவிட்டீர்
தண்டனைத் தீர்ப்பு எனக்கில்லையே
… யார் பிரிக்க
நிகழ்வனவோ வருவனவோ
வாழ்வோ சாவோ பிரித்திடுமோ
அன்பு கூர்ந்த (என்) கிறிஸ்துவினால்
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
… யார் பிரிக்க
வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ
பகைமைகளோ பழிச்சொல்லோ
பொறாமையோ பிரித்திடுமோ
… யார் பிரிக்க