விடாக் கண்டன் கொடாக் கண்டன் வாழ்க்கை வாழாதே
Vidaak Kanndan Kodaak Kanndan Vaalkkai Vaalaathae
Moses Rajasekar
விடாக் கண்டன் கொடாக்
கண்டன் வாழ்க்கை வாழாதே உன்
பிடிவாத குணத்தால் அழிந்து போகாதே
அடிக்கடி கடிந்து கொண்டும்
கடினப்படுத்தும் மனிதன்
சகாயமின்றி சடுதியிலே நாசமடைவான்
ஆதியிலே வந்ததையா – பாவம் – அந்த
ஏதேன் தோட்ட நடுவிலிருந்து மோகம்
புசியாதே புசியாதே எந்தன் ஆதாமே – நீ
புசிக்கும் நாளில் சாவாயே
என்றார் தேவனே – கனி
புழுபழுத்தக் கனி அழித்த பலன்
உலகில் வந்த – பாவம்
புழு புழுத்த மனிதன் அழிந்து போனான்
அதினால் வந்த சாபம்
– விடாக் கண்டன்
ஒரு நொடிப்பொழுதில் அழியும் மனித வாழ்வு
வீணாய் துடிப்பதினால் பலனேதும் கிடையாது
அலையாதே அலையாதே எந்தன் மகனே – நீ
அலைவதினால் கிடைக்கும் பலன் மரணம் தானே
நீ ஓடி ஓடி உழைச்சாலும் நிக்கிறது தான் நிற்கும்
நீ விழுந்து விழுந்து உருண்டாலும்
ஒட்டுறது தான் ஒட்டும்
– விடாக்கண்டன்
ஆராதனையில் ஒழுங்கா கலந்துகொள்ளணும் – தேவ
ஆவியிலே நிரம்பி ஜெபித்துப் பழகணும்
மறவாதே மறவாதே எந்தன் மகனே – நீ
மறந்தாலும் வாழ்வு இல்லை எந்தன் மகளே இதை
நித்திய சத்திய சுத்த மகத்துவ வாழ்க்கை வாழ வேண்டும்
உத்தம புத்திர தேவ நாமம் உயர்த்தப்பட வேண்டும் – -
– விடாக்கண்டன்