பாடல்
வல்ல தேவனை இன்றே
Valla Thaevanai Inte
வல்ல தேவனை இன்றே
துதி சாற்றியே ஸ்தோத்திரிப்போம்
மாறாத இயேசுவின் கிருபையில்
என்றும் வளர்ந்திடுவோம்
பாவங்களில் உழன்றிருந்த
நம்மை இயேசு உய்த்திடவே
கிருபையின் விடுதலை
அளித்துமே அன்பு செய்தார்
– வல்ல
பூரணமாய் செயல் தனிலே
வளர்ந்து நாமே கிரியை செய்ய
கிருபையில் பெருகிட
அருள்தனை தந்திடுவார்
– வல்ல
போதனையை பகுத்தறிந்து
வேதத்தை நாமே அறிந்திடுவோம்
கிருபையில் பெருகிட
அருள்தனை தந்திடுவார்
– வல்ல
துன்பங்களோ சோதனையோ
சூழ்ந்திடினும் சோர்ந்திடாமல்
கிருபையே போதுமே
சொந்தமாய் தாங்கிடுவார்
– வல்ல