பாடல்
வாரும் வாரும் மகத்துவ தேவனே
Vaarum Vaarum Makaththuva Thaevanae
வாரும் வாரும் மகத்துவ தேவனே
வல்லமையாக இப்போ வந்திடும்
மகிமைச் சொரூபனே
மாவல்ல தேவனே
மன்னா வந்தாசீர்வாதம் தாருமே
– வாரும்
தாய் தந்தை நீர் தானே
தற்பரா எங்கட்கு
தரணியில் வேறோர் துணை இல்லையே
– வாரும்
பாவத்தை வெறுத்துப்
பாவியை நேசிக்கும்
பரிசுத்த ராஜனே நீர் வாருமே
– வாரும்
பக்தரும் முக்தரும்
பாடித் துதிக்கின்ற
பரலோக ராஜனே நீர் வாருமே
– வாரும்
காருண்ய தேவனே
கதியுமை அண்டினோம்
கடைசிவரையும் காத்து இரட்சியும்
– வாரும்
மன்னா நின் வரவை
எண்ணியாம் ஜீவிக்க
ஏவுதல் தினம் தாரும் ஏகனே
– வாரும்
விழிப்புள்ள ஜீவியம்
விமலா நீர் ஈந்துமே
வெற்றியடையக் கிருபை தாருமே
– வாரும்
இவ்வித பாக்கியம்
ஏழைகளெங்கட்கு
ஈந்தாலுமக்கென்றும் ஸ்தோத்திரம்
– வாரும்