பாடல்
வானம் பூமி யாவையும்
Vaanam Poomi Yaavaiyum
Chandrasekaran
வானம் பூமி யாவையும்
படைத்த தேவனே
உம்வல்லமை வார்த்தையால்
படைத்த தேவனே
தேவனே தேவனே – 2
சூரியன் சந்திரனை நீர் படைத்தீர் ஆ… ஆ….
மழை கடல் தண்ணீரை நீர் படைத்தீர்
புல் பூ தாவரங்கள் நீர் படைத்தீர்
– வானம்
உயிரினங்கள் யாவும் நீர் படைத்தீர் ஆ… ஆ….
ஊரும் பிராணிகளை நீர் படைத்தீர்
பறக்கும் பட்சிகளை நீர் படைத்தீர்
– வானம்
ஆதாம் ஏவாளை நீர் படைத்தீர் ஆ… ஆ….
ஆசீர்வாதங்களை அள்ளி கொடுத்தீர்
எல்லா உரிமையும் எமக்கு தந்தீர்
– வானம்