பாடல்
வானம் மீதிலே என் மன்னன் வருவார்
Vaanam Meethilae En Mannan Varuvaar
வானம் மீதிலே என் மன்னன் வருவார்
மகிமையோடு என்னை ஏற்றுக் கொள்ளூவார்
நான் அங்கே போவேன் ஆர்ப்பரிப்பேன் – என்
ஆண்டவரின் துதியை சொல்லி மகிழ்வேன்
துன்பமில்லை அங்கே தொல்லைகளில்லை
பஞ்சம் இல்லை அங்கே பசியும் இல்லை
தூதர்கள் போல நான் கானம் பாடுவேன்
என் தூயவரை தரிசித்து தொழுதிடுவேன்
– வானம் மீதிலே
நான் நடக்கும் இடமோ தங்க மயமாம்
நான் தங்கும் ஸ்தலமோ தேவனின் இல்லம்
தூதர்கள் போல நானும் இருப்பேன் – என்
தூயவரின் கட்டளையை செய்து முடிப்பேன்
– வானம் மீதிலே
என் நேசர் என்றும் என்னோடிருப்பார்
நானும் என்றும் அவரோடிருப்பேன்
தூதர்கள் போல அவர் அருகினிலே
என் பரிசுத்தர் பாதம் பணிந்திடுவேன்
– வானம் மீதிலே