நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வானம் மீதிலே என் மன்னன் வருவார்

Vaanam Meethilae En Mannan Varuvaar

வானம் மீதிலே என் மன்னன் வருவார்

மகிமையோடு என்னை ஏற்றுக் கொள்ளூவார்

நான் அங்கே போவேன் ஆர்ப்பரிப்பேன் – என்

ஆண்டவரின் துதியை சொல்லி மகிழ்வேன்

துன்பமில்லை அங்கே தொல்லைகளில்லை

பஞ்சம் இல்லை அங்கே பசியும் இல்லை

தூதர்கள் போல நான் கானம் பாடுவேன்

என் தூயவரை தரிசித்து தொழுதிடுவேன்

– வானம் மீதிலே

நான் நடக்கும் இடமோ தங்க மயமாம்

நான் தங்கும் ஸ்தலமோ தேவனின் இல்லம்

தூதர்கள் போல நானும் இருப்பேன் – என்

தூயவரின் கட்டளையை செய்து முடிப்பேன்

– வானம் மீதிலே

என் நேசர் என்றும் என்னோடிருப்பார்

நானும் என்றும் அவரோடிருப்பேன்

தூதர்கள் போல அவர் அருகினிலே

என் பரிசுத்தர் பாதம் பணிந்திடுவேன்

– வானம் மீதிலே