பாடல்
வான் புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்
Vaan Puraavae Engal Meethu Vanthamarnthidum
வான் புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்
வன் செட்டைகள் விரித்தே
எம் அச்சமெல்லாம் அகல
வன் செயலாய் வந்திறங்கிடும் – எம்மில்
வன் செயலாய் வந்திறங்கிடும்
ஊற்றிடுமே உமதாவியை
மாற்றிடுமே உம்மைப் போலவே
ஆவியின் அக்கினியால் தரிசித்திட
அனலுள்ள இருதயம் அளித்திடவே
அன்பினால் அனைத்தோடும் கனலடைய
அனுதினம் அருள்மாரி சொரிந்திடுமே
– ஊற்றிடுமே
சோர்ந்திடும் உள்ளங்கள் உணர்வடைய
மாய்த்திடும் சரீரங்கள் உயிரடைய
ஆண்டிடும் சக்திகள் அகன்றோடவே
அண்டிவரும் எமக்கு நின் ஜெயம் தாருமே
– ஊற்றிடுமே
பற்பல பாஷைகள் மகிழ்ந்துரைக்க
அற்புத திருவன்பை புகழ்ந்துரைக்க
நற்செய்கையாம் நவ சிருஷ்டியதில்
பொற்பரனே வளர்ந்திட பொழிந்திடுவீர்
– ஊற்றிடுமே
நேசரே நினைத்திடா வேளை வருவீர்
சேர்த்திட தூயவரை உமதுடனே
வேளையும் காலமும் சாயுமுன்னே
வேளையிது தீர கனிந்திறங்கிடுமே
– ஊற்றிடுமே