பாடல்
வாலிப பிராயத்தில் தேவனை தேடு
Vaalipa Piraayaththil Thaevanai Thaedu
Sirkali Yesuprakasam
வாலிப பிராயத்தில் தேவனை தேடு
வாழ்நாள் நீடித்திடும் நித்திய
ராஜனை நித்தமும் நாடு
கிருபை தொடர்ந்திருக்கும்
சோதனை காலம் வந்திடும் போதும்
துன்பங்கள் உன்னை சூழ்ந்திடும் போதும்
தூயவனே அந்த மூலவனே வந்து
கண்ணீர் துடைத்திடுவார்
கர்த்தரின் வாசம் எத்தனை நேசம்
கவலைகள் பறந்துவிடும்
காலம் இனித்துவிடும்
– வாலிப
தொல்லையில் நல்ல துணைவராம் இயேசு
எல்லையில்லா இன்பம் அளிப்பவர் இயேசு
காலமெல்லாம் அவர் கரங்களில் இருந்தால்
ஞானமெல்லாம் இயேசு நல்கிடுவார்
கர்த்தரின் வாசம் எத்தனை நேசம்
கவலைகள் பறந்துவிடும்
காலம் இனித்துவிடும்
– வாலிப