வா மனிதா வா வா இயேசுவை சந்திக்க வா
Vaa Manithaa Vaa Vaa Yesuvai Santhikka Vaa
Sirkali Yesuprakasam
வா மனிதா வா வா
இயேசுவை சந்திக்க வா
உன் பாவத்தை போக்கவே இயேசு
பிரான் இப்பாரினிலே பிறந்தார்
குருபரனாய் திருமகனாய்
வந்தார் புவியில்
மனிதனின் மனதில் ஆயிரம்
ஆசைகள் மலைப்போல் குவிந்திருக்கும்
அகந்தை பெருமை சுயநலம்
எல்லாம் அலைகடலாய் பெருகும்
பேராசையினால் உன் நெஞ்சில்
மிருகங்கள் குடியிருக்கும்
அதற்கு மருந்தொன்று இருக்கிறது
விடி வெள்ளி பிறக்குது
இயேசுவின் வழியினில் வா என்றே நீ
– வா மனிதா
எல்லாம் இருந்தும் நிம்மதி என்பது
எங்கும் இருப்பதில்லை
சொல்லில் செயலில் ஒருமுகம் மனது
நிலையாய் வருவதில்லை
இல்லாதவனால் இருந்தால்
இரக்கம் கிடைப்பதில்லை
இதற்கு மருந்தொன்று இருக்கிறது
விடி வெள்ளி பிறக்குது
இயேசுவின் வழியினில் வா என்றே நீ
– வா மனிதா
வருத்தாய் பாரம் சுமக்கின்ற
மனிதனை வருந்தி அழைக்கின்றார்
அன்பு கருணை இரக்கம் கொண்டு
ஆதரவளிக்கின்றார்
பொல்லாதவாய் இருந்தாலும்
மன்னிப்பு அளிக்கின்றார்
இந்த புண்ணியர் இயேசுவின்
விண்ணக அரசினில்
உன்னை சேர்த்திட வா என்றே நீ
– வா மனிதா