நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே

Unnathamaanavarae En Uraividam Neerthaanae

Fr. S. J. Berchmans

உன்னதமானவரே என்

உறைவிடம் நீர்தானே - 2

நீர்தானே என் உறைவிடம்

நீர்தானே என் புகலிடம்

ஆதலால் ஆபத்து நேரிடாது எந்த

தீங்கும் மேற்கொள்ளாது

கால் கல்லில் மோதாமலே

காக்கும் தூதன் எனக்கு உண்டு

– நீர்தானே

சகலமும் படைத்தவரே

சர்வ வல்லவரே - 2

சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்

நடக்கச் செய்பவரே

– நீர்தானே

நான் நம்பும் தகப்பன் நீர்

என்று நான் தினம் சொல்லுவேன் - 2

வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்

தப்புவித்து காப்பாற்றுவீர் - 2

– நீர்தானே

மன்றாடும் போதெல்லாம்

பதில் தந்து மகிழ்கின்றீர் - 2 -நான்

ஆபத்து நேரம் என்னோடு இருந்து

தப்புவித்து கனப்படுத்துவீர்

– நீர்தானே

நீடிய ஆயுள் தந்து

திருப்தியாக்குகிறீர்

உமது சிறகால் மூடி மூடி

மறைத்து பாதுகாக்கின்றீர்

– நீர்தானே

வாஞ்சையாய் இருப்பதால்

விடுதலை எனக்குண்டு

உம்திரு நாமம் அறிந்ததால்

எனக்கு உயர்வு நிச்சயமே

– நீர்தானே