உன்னதமானவர் மறைவினிலே
Unnathamaanavar Maraivinilae
Fr. S. J. Berchmans
உன்னதமானவர் மறைவினிலே
சர்வ வல்லவர் நிழல்தனிலே
தங்கி உறவாடி மகிழ்கின்றேன்
எங்கும் வெற்றி நான் காண்கின்றேன்
லாலாலா…. லல்லால…….
ஆண்டவர் எனது அடைக்கலமானார்
நான் நம்பும் கோட்டையும் அரணுமானார்
வேடர் கண்ணிகள் கொள்ளை நோய்கள்
தப்புவித்து காப்பாற்றி தாங்குகிறார்
– உன்னதமானவர்
தமது சிறகால் அரவனைக்கின்றார்
இறக்கையின் கீழே அமரச் செய்கின்றார்
சத்திய வசனம் எனது கேடகம்
நிச்சயம் நிச்சயம் விடுதலை உண்டு
நிச்சயம் நிச்சயம் விடுதலை உண்டு
– உன்னதமானவர்
என் பக்கம் ஆயிரம்பேர் விழுந்தாலும்
பதினாயிரம் பேர் தாக்கினாலும்
பாதுகாப்பவர் என் பக்கத்திலே
பாதிப்பு இல்லையே பயமில்லையே
பாதிப்பு இல்லையே பயமில்லையே
– உன்னதமானவர்
செல்லும் இடமெல்லாம் என்னை காக்க
தமது தூதருக்கு கட்டளையிட்டார்
பாதம் கல்லிலே மோதாமலே
கைகளில் ஏந்திடுவார் தாங்கிடுவார்
கைகளில் ஏந்திடுவார் தாங்கிடுவார்
– உன்னதமானவர்
சிங்கத்தின் மீது நான் நடந்திடுவேன்
சீறும் சர்ப்பங்களை மிதித்திடுவேன்
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்
சாத்தானை காலடியில் நசுக்கிடுவார்
சாத்தானை காலடியில் நசுக்கிடுவார்
– உன்னதமானவர்