பாடல்
உன்னையன்றி வேறே கதி
Unnaiyanti Vaetae Kathi
உன்னையன்றி வேறே கதி
ஒருவரில்லையே சுவாமி
அன்னை தந்தை உற்றார் சுற்றார்
ஆருமுதவுவரோ – அதிசய மனுவேலா
ஆசை என் இயேசு ஸ்வாமி
பண்ணின துரோகமெல்லாம்
எண்ணினா லெத்தனைகோடி
பாதகத்துக் குண்டோ எல்லை
பரிதபித்தேனே தேடி
கண்ணினாலுன் திருவடி
காண நான் தகுமோ தான்
கடையனுக்கருள்புரி
மடியுமுன் யேசு சுவாமி
– உன்னையன்றி
அஞ்சியஞ்சி தூர நின்றென்
சஞ்சலங்களை நான் சொல்லி
அலைகடல் துரும்புபோல்
மலைவு கொண்டேனானையோ
கெஞ்சி கெஞ்சிக் கூவுமிந்த
வஞ்சகன் முகம்பாராய்
கிட்டி என்னிடம் சேர்ந்து
கிருபை வை இயேசு சுவாமி
– உன்னையன்றி
எத்தனை கற்றாலும் தேவ
பக்தியேதுமற்ற பாவி
எவ்வளவு புத்தி கேட்டும்
அவ்வளவுக் கதி தோஷி
பித்தனைப் பொல பிதற்றி
கத்தியே புலம்புமேழை
பேதையை கடைத்தேற்றி
பிழைக்க வை இயேசு சுவாமி
– உன்னையன்றி