பாடல்
உன் கண்ணீரின் ஜெபத்தை கேளாமல் போவேனோ
Un Kannnneerin Jepaththai Kaelaamal Povaeno
Moses Rajasekar
உன் கண்ணீரின் ஜெபத்தை
கேளாமல் போவேனோ
உன் கதறலின் குரலைக்
கேட்காமல் போவேனோ – (2)
இரட்சிக்கக் கூடாதபடிக்கு கைகள்
குறுகி போகவில்லை
கேட்க கூடாதபடிக்கு கைகள்
குறுகி போகவில்லை
கேட்க கூடாதபடிக்கு செவிகள்
மந்தம் ஆகவில்லை
– உன் கண்ணீரின்
ஆகாரின் அழுகுரல் அன்று கேட்ட நான்
உந்தனின் குரலை கேட்பது உண்மையல்லோ
அன்னாரின் விண்ணப்பம் ஏங்கி கேட்ட நான்
உன் கதறலின் குரலைக் கேட்காமல் போவேனோ
– உன் கண்ணீரின்
உன் விழிகளில் வழிகின்ற கண்ணீர் துளிகளால்
என் பாதத்தைக் கழுவின நாளினை மறவேனே
அழுகையின் பள்ளத்தில் உருவ நடந்து – 2
அதை நீரூற்றாக்கி கொள்ளும் நாளிதுவே
– உன் கண்ணீரின்
கேட்பேன் பதில் கொடுப்பேன்– (4)