பாடல்
உன் ஆத்துமத்தில் நீ ஏன் கலங்குறாய்
Un Aaththumaththil Nee Aen Kalanguraay
Sirkali Yesuprakasam
உன் ஆத்துமத்தில் நீ ஏன் கலங்குறாய்
வீணாய் உனக்குள்ளே நீ ஏன் தியங்குறாய்
நீ தேவனை நோக்கியே
காத்திரு காத்திரு காத்திரு
வாஞ்சித்து கதறும் மான்கள் ஒரு
நீரோடை தேடி அலையும் தினம்
வாஞ்சித்து கதறும் ஆத்மா தேவ
வார்த்தைகள் கேட்டு மகிழும்
உன் தேவன் எங்கே என்று
உன்னை கேட்கிற கூட்டம் ஒன்று
உன்னை நிந்திப்பதாலே இன்று உன்
நிலையில் தடுமாற்றம் உண்டு
கர்த்தர் உன் பட்சம் இருக்க இந்த
மனிதன் உனக்கென்ன செய்வான் தேவ
கிருபை உன்னை என்றும் தாங்கும் தீய
சாத்தான் கிரியை யாவும் நீங்கும்
– உன்