நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உன் ஆத்துமத்தில் நீ ஏன் கலங்குறாய்

Un Aaththumaththil Nee Aen Kalanguraay

Sirkali Yesuprakasam

உன் ஆத்துமத்தில் நீ ஏன் கலங்குறாய்

வீணாய் உனக்குள்ளே நீ ஏன் தியங்குறாய்

நீ தேவனை நோக்கியே

காத்திரு காத்திரு காத்திரு

வாஞ்சித்து கதறும் மான்கள் ஒரு

நீரோடை தேடி அலையும் தினம்

வாஞ்சித்து கதறும் ஆத்மா தேவ

வார்த்தைகள் கேட்டு மகிழும்

உன் தேவன் எங்கே என்று

உன்னை கேட்கிற கூட்டம் ஒன்று

உன்னை நிந்திப்பதாலே இன்று உன்

நிலையில் தடுமாற்றம் உண்டு

கர்த்தர் உன் பட்சம் இருக்க இந்த

மனிதன் உனக்கென்ன செய்வான் தேவ

கிருபை உன்னை என்றும் தாங்கும் தீய

சாத்தான் கிரியை யாவும் நீங்கும்

– உன்