பாடல்
உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
Ummilae Pelan Kollum Manitharkalellaam
Moses Rajasekar
உம்மிலே பெலன் கொள்ளும்
மனிதர்களெல்லாம்
உண்மையிலே பாக்கியவான்கள்
உம்மிலே ஆறுதல் கொள்ளும்
நாங்களெல்லாம் பாக்கியவான்கள் – 2
பாக்கியவான்கள் பாக்கியவான்கள்
நாங்களெல்லாம் பாக்கியவான்கள்
இருளின் மிரளல்கள் தரும் கடும் நிலவுகள்
மருளும் என் மனம் கலங்கும் ஒரு புறம்
உருளும் இவ்வுலகம் புரளும் மறுபுறம்
அருள் ஏராளம் தரும்
உந்தன் கிருபை தாங்குது
– என்னை பாக்கியவான்கள்
வியாதி படுக்கைகள் தரும் கண்ணீர் சிதறல்கள்
மரண வாதைகள் வலிக்கும் சோகங்கள்
நெருங்கும் உம் கரம் வருடும் என் முகம்
கரடு முரடு பாதை கூட
மென்மையாகுதே!
– பாக்கியவான்கள்
நேசர் மடியிலே தவழ்ந்து தினமும் நான்
மார்பினிலே சாய்ந்து இளைப்பாறுவேன்
சிலுவை என் தஞ்சம் எனது அடைக்கலம்
அஞ்சும் எந்தன் நெஞ்சம்
அடையும் ஆறுதல்!
– பாக்கியவான்கள்