பாடல்
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு
Ummaiyallaamal Enakku Yaarunndu
Fr. S. J. Berchmans
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?
உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு?
ஆசையெல்லாம் நீர்தானைய்யா
தேவையெல்லாம் நீர்தானைய்யா
இரட்சகரே…. இயேசுநாதா…
தேவையெல்லாம் நீர்தானே
இதயக்கன்மலை நீர்தானைய்யா
உரிய பங்கும் நீர்தானைய்யா
எப்போதும் உம்மோடு இருக்கின்றேன்
வலக்கரம் பிடித்துத் தாங்குகிறீர்
– ஆசையெல்லாம்
உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்
நீரே எனது உயிர்த்துடிப்பு
உமது விருப்பம்போல் நடத்துகிறீர்
முடிவிலே மகிமையில் ஏற்றுக் கொள்வீர்
– ஆசையெல்லாம்
உலகில் வாழும் நாட்களெல்லாம்
உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன்
உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன்
உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன்
– ஆசையெல்லாம்