நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உம்மை விட்டு நான் எங்கே போவேன்

Ummai Vittu Naan Engae Povaen

Lucas Sekar

உம்மை விட்டு நான் எங்கே போவேன்

உம்மை விட்டால் நான் நஷ்டமாவேன்

வாழ்வில்லப்பா வழியில்லப்பா

நீர் இன்றி உலகத்தில் யாரும் இல்ல(2)

இயேசையா இயேசையா

இயேசையா இயேசையா

இயேசையா இயேசையா

நீர் இன்றி உலகத்தில் யாரும் இல்ல

யார் என்னை நிலைப்படுத்த முடியும் அப்பா

நித்திய அஸ்திபாரம் நீர்தானையா (2)

உம் சமூகம் விட்டு நான் போவேன் என்றால்

பூமியிலே நிலையற்று அலைவேன் அய்யா

உம் கையில் என்னை தந்து விட்டேன்

ஒருவரும் என்னை பறிப்பதில்லை

ஒருவரும் என்னை பறிப்பதில்லை

– இயேசையா….

பரலோகில் உம்மையன்றி யார் உண்டைய்யா

பூவுலகில் உம்மை தவிர விருப்பமில்லை (2)

பூமியில் வாழ்ந்தாலும் நீர்தானையா

பரலோகம் சேர்ந்தாலும் நீர்தானையா

என் கண்ணீர்கள் யாவையும் துடைத்திடுவீர்

கண்மணி போல் என்னை காத்திடுவீர்

நீர் இன்றி ஒரு அணுவும் அசையாதையா

– இயேசையா….

எல்லா ஜீவனின் கண்கள் எல்லாம்

உம்மைதான் நோக்கி பார்க்கின்றது(2)

நீர் கொடுக்க அவைகள் வாங்கிக் கொள்ளும்

நன்மையால் அவைகள் திருப்தியாகும்

சர்வ சிருஷ்டிக்கும் நீரே எஜமானனே

நீர் இன்றி ஒரு அணுவும் அசையாதையா

நீர் இன்றி ஒரு அணுவும் அசையாதையா

– இயேசையா….