நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உள்ளமெல்லாம் உருகுதய்யா உம் கல்வாரி காட்சி கண்டு

Ullamellaam Urukuthayyaa Um Kalvaari Kaatchi Kanndu

Sirkali Yesuprakasam

உள்ளமெல்லாம் உருகுதய்யா உம்

கல்வாரி காட்சி கண்டு என்

தேகமெல்லாம் நடுங்குதய்யா உம்

சிலுவையின் பாடு கண்டு உம்

சிலுவையின் பாடு கண்டு

மகிமை மாட்சிமை மறந்து விட்டு

மனிதனாய் ஏன் பிறந்தீர்

மண்ணான என்னை நீர் நேசித்ததால் உம்

மகிமை மறந்தீரோ மனு

உருவாய் பிறந்தீரோ மனு

உருவாய் பிறந்தீரோ

– உள்ளமெல்லாம்

இரத்தமும் ஆறாய் பெருகிடவே இரண

காயங்கள் ஏன் அடைந்தீர்

இரட்சிப்பின் வாழ்வை நான் பெறவே

இரத்தத்தை வடித்தீரோ தேவ

சித்தத்தை முடித்தீரோ தேவ

சித்தத்தை முடித்தீரோ

– உள்ளமெல்லாம்

அன்பின் ரூபம் ஆனவரே உம்

மேல் ஆணிகள் பாய்ந்ததேனோ

ஆணவத்தால் நான் செய்த

பாவங்களே கூர் ஆணியாய் மாறியதோ

உம் மேனியில் பாய்ந்ததுவோ

உம் மேனியில் பாய்ந்ததுவோ

– உள்ளமெல்லாம்