நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உள்ளமெல்லாம் உருகுதையோ

Ullamellaam Urukuthaiyo

உள்ளமெல்லாம் உருகுதையோ

உத்தமனை நினைக்கையிலே

உம்மையல்லால் வேறே தெய்வம்

உண்மையாய் இங்கில்லையே

கள்ளனென்று தள்ளிடாமல்

அள்ளி என்னை அணைத்தவா

சொல்லடங்கா நேசத்தாலே

சொந்தமாக்கிக் கொண்டீரே

எத்தன் என்னை உத்தமனாக்க

சித்தம் கொண்டீர் என் ஏசையா

எத்தனையாம் துரோகம் நான் செய்தேன்

அத்தனையும் நீர் மன்னித்தீர்

இரத்தம் சிந்த வைத்தேனே நான்

அத்தனையும் என் பாவமன்றோ

கர்த்தனே உம் அன்புக்கீடாய்

நித்தம் உம்மையே சேவிப்பேன்

– உள்ளமெல்லாம்

மேக மீதில் இயேசு ராஜன்

வேகம் வரும் நாள் என்றோ

லோகமீதில் காத்திருப்போர்

ஏக்கமெல்லாம் தீர்ந்திட

தியாக ராஜன் இயேசுவை நான்

முகமுகமாய் தரிசிக்க

ஆவலோடு ஏங்கும் தாசன்

சோகம் நீங்கும் நாள் எப்போ

– உள்ளமெல்லாம்