பாடல்
உலகத்தின் தோற்றத்தின்
Ulakaththin Thottaththin
Premji Ebenezer
உலகத்தின் தோற்றத்தின்
முன் என்னை கண்டீர்
தாயின் கருவின் உள்ளே
என்னை நீர் நிரைத்தீர்
வளர்கின்ற பிராயத்தில்
கூடவே இருந்தீர்
சிந்தையில் முழுவதிலும்
நிறைந்து வந்தீர்
நீர் இன்றி யாருமில்லை
உம்மை நினைக்காத நாளே இல்லை
சுவாசிக்கும் காற்றிலும் நீரே
ஒவ்வொரு மூச்சிலும் நீரே
என் ஆசை எல்லாம் நீரே
என் ஆறுதலும் நீரே
என் ஆசை எல்லாம் நீரே
என் ஆறுதலும் நீரே
வாழ்கின்ற வாழ்க்கையின்
அர்த்தமும் நீரே
இதயத்தின் ஏக்கத்தை
தீர்ப்பவர் நீரே
சாதிப்பதெல்லாம்
உம் கிருபையினாலே
உயர்விற்கும் வாழ்விற்கும் காரணரே
– நீர் இன்றி யாருமில்லை