நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும்

Thollaik Kashdangal Soolnthidum

தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும்

துன்பம் துக்கம் வரும்

இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்

இருளாய் தோன்றும் எங்கும்

சோதனை வரும் வேளையில்

சொற் கேட்கும் செவியிலே

பரத்திலிருந்து ஜெயம் வரும்

பரன் உன்னைக் காக்க வல்லோர்

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு

உண்டெனக்கு உண்டெனக்கு

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு

காத்திடுவார் என்றுமே

ஐயம் மிகுந்ததோர் காலத்தில்

ஆவி குறைந்ததால் –மீட்பர்

உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்

என் பயம் யாவும் நீக்கினார்

முற்றும் என்னுள்ளம் மாறிற்று

இயேசென்னைக் காக்க வல்லோர்

– காக்கும் வல்ல

என்ன வந்தாலும் நம்புவேன்

என் நேச மீட்பரை – யார் கைவிட்டாலும்

பின் செல்வேன் எனது இயேசுவை

அகல ஆழ உயரமாய்

எவ்வளவன்பு கூர்ந்தார்

என்ன துன்பங்கள் வந்தாலும் அவர்

என்னைக் கைவிடமாட்டார்

– காக்கும் வல்ல