பாடல்
திருக்கரத்தால் தாங்கியென்னை
Thirukkaraththaal Thaangiyennai
திருக்கரத்தால் தாங்கியென்னை
திருசித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினம் நீர் வனைந்திடுமே – 2
உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்
– திருக்கரத்தால்
ஆழ்கடலில் அலைகளினால்
அசையும் போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசுவுண்டு
சேர்ந்திடுவேன் அவர் சமுகம்
– திருக்கரத்தால்
அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே இந்த மீட்பு
கண்களினால் காண்கின்றேனே
இன்ப கானான் தேசமதை
– திருக்கரத்தால்