பாடல்
திறந்த வாசலை எனக்கு தந்தார்
Thirantha Vaasalai Enakku Thanthaar
Pastor K. S. Wilson
திறந்த வாசலை எனக்கு தந்தார்
ஒருவனும் பூட்ட முடியாதே
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா – 2
ஜெயத்தை தந்திடுவார்
ஜெயமாய் நடத்திடுவார் அவர்
நல்லவரே அவர் வல்லவரே
என்னை நடத்தும் பாதை எல்லாம் அதிசயம்
– திறந்த
என்னோடு இருக்கின்றார்
என்னை நடத்துவார்
கிருபைகளால் என்னை அலங்கரித்து
நன்மையினால் என்னை மூடி ஆட்கொள்வார்
– திறந்த
கலங்காதே விசுவாசியே
கர்த்தர் உனக்கு துணை
அழைத்தவரே அவர் உண்மையுள்ளவர்
அற்புதமாய் உன்னை நடத்திடுவார்
– திறந்த
தேசத்தின் ஜனங்களே
வேலையை நடத்துங்கள்
கையிட்டு செய்யும் வேலைகள் யாவையும்
ஆசீர்வாதமாய் நடத்திடுவார்
– திறந்த