பாடல்
தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில்
Thanimaiyin Paathaiyil Thakappanae Um Tholil
Moses Rajasekar
தனிமையின் பாதையில்
தகப்பனே உம் தோளில்
சுமந்ததை நான் மறப்பேனோ
சுமந்ததை நான் மறப்பேனோ – 2
ஆ! எத்தனை அன்பு என் மேல்
எத்தனை பாசம் என் மேல் – 2
இதற்கு ஈடு என்ன தருவேன் நான்
இதற்கு ஈடு என்ன தருவேன் நான்– 2
– தனிமையில்
சோர்ந்து போகும் நேரங்கள் எல்லாம்
மார்போடு அணைத்துக் கொண்டீரே
கண்ணீரைக் கணக்கில் வைத்தீரே
ஆறுதல் எனக்கு தந்தீரே
ஆ! எத்தனை
உடைக்கப்பட்ட நேரங்கள் எல்லாம்
அடைக்கலம் எனக்கு தந்தீரே
தடுமாறும் வேளையில் எல்லாம்
தகப்பன் போல சுமந்து சென்றீரே
ஆ – எத்தனை
பலர் சபித்து என்னை
தூற்றும் போதெல்லாம்
என்னை ஆசீர்வதித்து
உயர்த்தி மகிழ்ந்தீரே – உம்
உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே
இதற்கு ஈடு என்ன தருவேன் நான்
ஆ – எத்தனை