பாடல்
தேவனே உம் வார்த்தையால்
Thaevanae Um Vaarththaiyaal
Chandrasekaran
தேவனே உம் வார்த்தையால்
நாள்தோறும் வாழ்கிறேன்
உந்தன் அன்பின் வார்த்தைகள்
எந்தன் வாழ்வில் ஜீவனே – 2
தண்ணீர்களை கடந்தேன்
தேவரீர் என்னோடு இருந்தீர்
ஆறுகளை கடந்தேன்
அவைகள் என்மேல் புரளவில்லை
உந்தன் ஜீவ வார்த்தைகள்
எந்தன் வாழ்வில் போதுமே
எப்பக்கம் நெருக்கப்பட்டேன்
மனம் மடிந்து போகவில்லை
இலங்கை தேசமெங்கும்
இயேசு நாமம் உயர்த்திடுவேன்
– உந்தன்
சத்துரு எதிர்க்கையிலே
தேவ ஆவி கொடி பிடித்தீர்
கிறிஸ்து என் ஜீவன்
மரணமே என் ஆதாயம்
– உந்தன்