நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தேவன் இல்லை என்று சொல்லும் மானிடரே வாரும்

Thaevan Illai Entu Sollum Maanidarae Vaarum

Sirkali Yesuprakasam

தேவன் இல்லை என்று

சொல்லும் மானிடரே வாரும்

தேவனை நான் காட்டுகின்றேன்

ஜெப போரில் சேரும்

ஐம்புலன் அறிவாலே அறிந்திட

முடியாது அன்னை சொல்லாவிடில்

தந்தை யார் தெரியாது

ஆண்மையில்லாதவர்க்கு வாரிசு இல்லை

ஆன்மா குருடருக்கு ஆண்டவன் இல்லை

ஆன்மா குருடருக்கு ஆண்டவன் இல்லை

– தேவன்

உயிருக்குள் உயிராகி உறைந்தவர்

இயேசு அவர் ஒருவர் இல்லை

யென்றால் நான் வெறும் தூசு

ஜீவ பலியாக வந்த இயேசுவை பாரு

ஜெகமதில் அவர் இன்றி

வேறு தெய்வம் யாரு

ஜெகமதில் அவர் இன்றி

வேறு தெய்வம் யாரு

– தேவன்

புவி வாழ்க்கை என்பது போராட்டம்

நிறைந்தது போராடி வென்றவரே

புகழோடு வாழ்வாரே

ஜெபப் போரில் ஜெயம் பெறுவோர்

தேவனை காண்பாரே

ஜெபமதை அறியார்கள் தேவனை அறியாரே

ஜெபமதை அறியார்கள் தேவனை அறியாரே

– தேவன்