பாடல்
தேவாதி தேவன் தெய்வீக மைந்தன்
Thaevaathi Thaevan Theyveeka Mainthan
Sirkali Yesuprakasam
தேவாதி தேவன் தெய்வீக மைந்தன்
கல்வாரி மலையின் முடியினிலே
எந்தனுக்காக உந்தனுக்காக
சிலுவை மரத்தில் பலியானார்
இது தாய் அன்பிலும் மேலானது
எந்த காலத்திலும் மாறாதது
வானம் பூமி அவரது சொந்தம்
விந்தை கிறிஸ்து அவரது நாமம்
கண்ணீர் துடைக்கும் கர்த்தரின் கரங்கள்
காலம் முழுதும் காத்திடும் தேவன்
இன்று போல் என்றுமே
அவர் பாதத்திலே
இருந்தால் இல்லையே தொல்லையே
– இது
ஜீவன் தந்த இயேசுவினாலே
நாளும் நன்மை நமைதொடா்ந்திடுமே
பாவம் போக்கும் பரிசுத்தராலே
பாரில் கிருபை என்றும் பெருகிடுமே
இன்று போல் என்றுமே
அவர் பாதத்திலே
இருந்தால் இல்லையே தொல்லையே
– இது