நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தேவா உம் நாமத்தைப் பாடி புகழ்வேன்

Thaevaa Um Naamaththaip Paati Pukalvaen

Chandrasekaran

தேவா உம் நாமத்தைப் பாடி புகழ்வேன்

ஆனந்தம் ஆனந்தமே – 2

நீர் செய்த நன்மைகள் ஆயிரமாயிரம்

ஆனந்தம் ஆனந்தமே – 2

ஏழைகளின் தேவனே

எளியோரின் இராஜனே

திக்கற்ற பிள்ளைகளின் தேவனே

கேரூபின் சேராபீன்கள்

ஓய்வின்றி பாடி போற்ற

துதிக்கு பாத்திரரே துதிகளின்

மத்தியிலே வாசம் செய்திடும்

மகிமைக்கு பாத்திரரே

– ஏழைகளின்

காற்றையும் கடலையும்

அடக்கி அமர்த்திய

அற்புத தேவன் நீரே

அக்கினி மதிலாய் நடுவில்

வாசம் செய்யும்

அதிசய தேவன் நீரே

– ஏழைகளின்

ஜாதிகள் முழங்கால்கள்

முடக்கி பணிந்திடும்

உன்னத தேவன் நீரே

நாவுகள் யாவும்

அறிக்கை செய்திடும்

உத்தம தேவன் நீரே

– ஏழைகளின்