பாடல்
தேவ மைந்தன் தோளின் மீது இத்தனை பாரமா
Thaeva Mainthan Tholin Meethu Iththanai Paaramaa
Sirkali Yesuprakasam
தேவ மைந்தன் தோளின்மீது
இத்தனை பாரமா உன்னை
தேடி வந்து நன்மை செய்தது
அவரின் பாவமா
முகத்தினிலே துப்பி தலையிலே
கொட்டி வாரினாலே அடித்தார் அவர்
மேனி முழுதும் உழுத நிலம் போல
உருக்குலைதத்து மகிழ்ந்தார்
பாடுகள் அடைந்து பரிசுத்த
தேவன் பாவ பலியாகிறார் உன்
ஆக்கினை ஏற்று ஆண்டவர்
இயேசு அங்கே கேடாகிறார்
– தேவ
இரங்கும் படி கேட்ட குருடனுக்கு
இரங்கி பார்வை கொடுத்தவர்
பன்னிரெண்டாண்டு பெரும் பாடடைந்த
ஸ்திரிக்கு சுகம் தந்தவர்
பாடையை தொட்டு வாலிபன்
பிழைக்க அற்புதம் செய்தவர்
நாறி போன லாசுருவை
எழுப்பி நட்புக்கு உயிர்தந்தவர்
– தேவ