நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தேடி இயேசு வந்தார்

Thaeti Yesu Vanthaar

Fr. S. J. Berchmans

தேடி இயேசு வந்தார் என்னைத்

தேற்றி வாழவைத்தார்

கண்ணீர் கடலினிலே

நான் கதறி மூழ்கையிலே

கர்த்தர் தம் கரம் நீட்டினார்

என் கண்ணீரெல்லாம் துடைத்தார்

என் கண்ணீரெல்லாம் துடைத்தார்

– தேடி

பாவச் சேற்றினிலே

நான் மூழ்கிப் போகையிலே

கல்வாரி இரத்தத்தாலே

கழுவி மீட்டுக் கொண்டார்

கழுவி மீட்டுக் கொண்டார்

– தேடி

நோயின் பிடியினிலே

நான் வாடித் தவிக்கையிலே

இயேசுவின் காயங்களால்

சுகமானேன் சுகமானேன் – நான்

சுகமானேன் சுகமானேன்

– தேடி