பாடல்
தாசனாகிய அப்போதே
Thaasanaakiya Appothae
Ravi Bharath
தாசனாகிய யாக்கோபே
பயப்படாதே திகையாதே
உனக்கு முன்பாக நான் செல்வேன்
வழிகள் செவ்வையாக்குவேன்
இதுவரையும் காத்திட்டேன்
இனியும் காத்திடுவேன்
மறைவில் இருக்கும் பொக்கிஷங்களை
உனக்கு தந்திடுவேன்
வலக்கரத்தினால் தாங்கிடுவேன்
பெலனை தன்திடுவேன்
வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை
ஓட செய்வேன்
உம் மேல் ஆவியும்
ஆசிர்வாதமும் உற்றிடுவேன்
– தாசனாகிய
தாயைப்போல தேற்றிடுவேன்
தந்தைப்போல அணைத்திடுவேன்
கால்கள் கல்களில் இடறாமல்
கருத்தாய் காத்திடுவேன்
நினைத்திடாதே அளவுக்கு நான்
உன்னை உயர்த்திடுவேன்
– தாசனாகிய
ஆறுகளை நீ கடக்கையிலே
உன்னோடு நானிருப்பேன்
அக்கினி ஜ்வாலை உன்னைப்
பற்றாமல் காத்துக்கொள்வேன்
உனக்கு எதிராய் எழும்புவோரை
நானே சிதறடிப்பேன்
– தாசனாகிய