பாடல்
தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீர்
Thaakam Theerkkum Jeeva Thannnneer
Sirkali Yesuprakasam
தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீர்
இயேசு உன்னை அழைக்கின்றாரே
கன்மலையை பிளந்து
தண்ணீரை தந்தவர்
உன் பாவம் போக்கவே ஜீவ
தண்ணீரை தருகின்றாரே
– தாகம்
கானல் நீர் போன்ற உலக அன்பு
காற்றாய் மாறி போகுமே
இயேசு அன்பு நமக்கு போதும்
என்றும் அவர் தான் சொந்தமே
– தாகம்
வானவில் போல் வாழ்க்கை இன்பம்
வாடும் மலர் போல் உதிர்ந்து விடும்
இயேசு தருகின்ற பேரின்பம்
என்றும் நிலைத்திடும் நித்தியானந்தம்
– தாகம்