பாடல்
ஸ்திரிகளுக்குள் ரூபவதியே
Sthirikalukkul Roopavathiyae
Moses Rajasekar
ஸ்திரிகளுக்குள் ரூபவதியே
தண்ணீர்மொள்ள வந்தவளே – ஓஹோ.. ஹோ
கானானின் மானே – என்
எஜமானின் தேனே – நி
கண் கவரும் புள்ளிமானே
அழகிற் சிறந்தவரின் அழகை ரசிக்க வந்த
அழகு மணவாட்டியே – உன்
உள்ளழகின் கனிகளை ரசித்து ருசித்திடும்
மணவாளன் நான் தானே (2)
உன் பற்களின் நடுவே வரும்
பொற்கால துதிகளுக்கு – மயங்கும் மன்னன் நானே
உன் சொற்களின் கோர்வையால்
அழகு துதி தந்து என்னை நீ கவர்ந்தாயே (2)
– ரூபவதியே
சித்திரதையலாடை முத்திரை மோதிரம்
அணிந்து வருபவளே
உன் நித்திரை மயக்கத்தில்
நேசரின் மார்பினில் சாய்ந்து மகிழ்பவளே (2)
இத்தரை மீதினில் அத்துரை தேவனை
பாடி மகிழ்பவளே
உன் உத்தம புத்திரத்தில் நேசரின்
இதயத்தில் இடம் பெற்று மகிழ்ந்தாயே –
– ரூபவதியே