நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது

Sooriyan Marainthu Anthakaaram Soolnthathu

சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது

சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது (2)

சோர்ந்த என் தேகம் அயர்ந்துமே

இளைப்பாறப் போகுது – தூயா

கிருபை கூர்ந்து காருமையா

பகல் முழுவதும் பட்சமாய்

என்னைப் பாதுகாத்தீரே

பகல் முழுவதும் பட்சமாய்

என்னைப் பாதுகாத்தீரே (2) – சகல

தீமையுமகல வைத்தருள் நலமும் தந்தீரே

சுவாமி உந்தன் பாதம் பணிகிறேன்

– சூரியன் மறைந்து

பாதகம் மிக புரிந்தேன் பரம நாயகா

பாதகம் மிக புரிந்தேன் பரம நாயகா (2)

பாவி நானிந்த நாளிலும்

பல தீவினை செய்தேனையா

கோபமின்றி என் பாவம் பொறுத்திடுவாய்

– சூரியன் மறைந்து

ராவில் வரும் மோசமொன்றும் என்னை

சேராமல்

ராவில் வரும் மோசமொன்றும் என்னை

சேராமல் (2) –

பேயின் சர்ப்பனை தீய சொப்பனம்

மனதில் நேராமல்

நேயா நின் நல் தூதர் காவல் தா

– சூரியன் மறைந்து

ஆத்துமம் சரீரம் எனக்கான யாவையும்

ஆத்துமம் சரீரம் எனக்கான யாவையும்(2)

அப்பனுன் கையிலொப்புவித்து

நான் அயர்ந்து தூங்குவேன்

ஐயனே உன் பொன்னடி சரணம்

– சூரியன் மறைந்து