நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சொல்லத் துணிந்தேன் அப்பா என்று

Sollath Thunninthaen Appaa Entu

Sirkali Yesuprakasam

சொல்லத் துணிந்தேன் அப்பா என்று

உம் பின் செல்லப் பணிந்தேன்

உம்மை கண்டு ஆமென்

அப்பா இயேசப்பா என்று சொல்லுவேன்

உலகை வெல்லுவேன்

யோவான் எழுதிய சுவிஷேசம் அதில்

ஒன்று பன்னிரெண்டாம் திருவசனம்

இயேசுவின் நாமத்தில் விசுவாசம் அது

எல்லார்க்கும் பிள்ளையாகும் அதிகாரம் அந்த

அதிகாரம் தனை பெற்ற பிள்ளையாய்

உம்மை அப்பா என்று

அழைக்கும் புத்திரனாய்

– சொல்ல

காணும் உலக இன்ப காட்சி யாவும்

கானல் நீராக போச்சு

நானும் எனது என்ற பேச்சு எல்லாம்

வீணும் விருதாய் ஆச்சு இந்த

மாய உலகத்தை மறந்தே இயேசு

மாதேவனின் பாதம் பணிந்தேன்

– சொல்ல

மாளும் மாந்தரின் வீழ்ச்சி யாவும்

மா பாதகன் சாத்தான் சூழ்ச்சி

மா தேவா நின் பெரும் ஆட்சி நான்

மனிதனாய் நிலை நிற்கும் சாட்சி

என்றும் சாட்சியின் பிள்ளையாய் வாழ

உந்தன் மோட்ச வாழ்வினில் தனில் சேர

– சொல்ல