பாடல்
சொல்லத் துணிந்தேன் அப்பா என்று
Sollath Thunninthaen Appaa Entu
Sirkali Yesuprakasam
சொல்லத் துணிந்தேன் அப்பா என்று
உம் பின் செல்லப் பணிந்தேன்
உம்மை கண்டு ஆமென்
அப்பா இயேசப்பா என்று சொல்லுவேன்
உலகை வெல்லுவேன்
யோவான் எழுதிய சுவிஷேசம் அதில்
ஒன்று பன்னிரெண்டாம் திருவசனம்
இயேசுவின் நாமத்தில் விசுவாசம் அது
எல்லார்க்கும் பிள்ளையாகும் அதிகாரம் அந்த
அதிகாரம் தனை பெற்ற பிள்ளையாய்
உம்மை அப்பா என்று
அழைக்கும் புத்திரனாய்
– சொல்ல
காணும் உலக இன்ப காட்சி யாவும்
கானல் நீராக போச்சு
நானும் எனது என்ற பேச்சு எல்லாம்
வீணும் விருதாய் ஆச்சு இந்த
மாய உலகத்தை மறந்தே இயேசு
மாதேவனின் பாதம் பணிந்தேன்
– சொல்ல
மாளும் மாந்தரின் வீழ்ச்சி யாவும்
மா பாதகன் சாத்தான் சூழ்ச்சி
மா தேவா நின் பெரும் ஆட்சி நான்
மனிதனாய் நிலை நிற்கும் சாட்சி
என்றும் சாட்சியின் பிள்ளையாய் வாழ
உந்தன் மோட்ச வாழ்வினில் தனில் சேர
– சொல்ல