பாடல்
சொல்லால் ஆகுமா இதைச் சொன்னால் புரியுமா
Sollaal Aakumaa Ithaich Sonnaal Puriyumaa
Moses Rajasekar
சொல்லால் ஆகுமா இதைச்
சொன்னால் புரியுமா – என
இயேசு ராஜன் புகழைச்
சொன்னால் உலகம் தாங்குமா
முக்கோடி எழுந்தாலும்
தக்கி முக்கி எழுதினாலும்
முன்னவன் புகழ்தனையே
எழுதிட முடியுமா
– சொல்லால்
மரித்தவன் வீட்டை மிதித்த தேவன்
நீர்த்த உயிரை உயிர்க்கு தந்தார்
கதறினா குருடனின் கண்களைத் திறந்து
வாழ்வை ஒளிமயமாக்கின தேவன்
– சொல்லால்
பன்னிரண்டு வருடம் படுக்கையில் கிடந்த
பாதக ஸ்திரீயின் பாடதைப் போக்கின
பாடையில் சுமந்து வந்த பாதக செல்வனின்
பாடையத் தொட்டு உயிருடன் எழுப்பினதை
– சொல்லால்
கவலை கண்ணீரோடு கடந்து வந்திடும்
யாரையும் வெறுக்காது தள்ளாத தேவன்
வாடி நின்றிடும் மக்களின் குறளுக்கு
வார்த்தையை அனுப்பி
சுகம் தர வல்லவர் அவர்
– சொல்லால்