நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சிலுவை நாதர் இயேசுவின்

Siluvai Naathar Yesuvin

சிலுவை நாதர் இயேசுவின்

பேரொளி வீசிடும் தூய கண்கள்

என்னை நோக்கிப் பார்க்கின்றன

தம் காயங்களையும் பார்க்கின்றன

என் கைகள் பாவங்கள் செய்திட்டால்

தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே

தீய வழியில் என் கால்கள் சென்றால்

தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே

– சிலுவை

தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்

ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்

வீண் பெருமை என்னில் இடம் பெற்றால்

முள்முடி பார்த்திட ஏங்குகின்றார்

– சிலுவை

திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்

வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்

தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட

கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார்

– சிலுவை

அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்

அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்

கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்

கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்

– சிலுவை