சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே
Saththiyamum Jeevanumaay Niththamumae
சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே
வாழ்ந்திடும் – கர்த்தனே
எங்கட்கு கரம் தந்து என்றும் தாங்கிடும்
சுத்தமாய் நடப்பதற்கு சுத்த ஆவி தந்திடும்
சித்தமோடு இந்த வேளை வந்திறங்கிடும்
வானம் திறந்தருளும் பல
தானங்களையிந் நேரமதில்
வானவனே ஞானமுள்ள
வல்ல குருநாதனே – தேனிலும்
மதுரம் திவ்ய ஆசீர்வாதங்கள்
என்னை முற்றும் மாற்றிட
உன்னத பெலனீந்திடும்
இன்னும் ஈசனேயும் நல்வரங்களீந்திடும்
கண்ணிகளில் சிக்கிடாமல்
கண்மணி போல் காத்திடும்
கன்மலையும் மீட்பருமென் காவலும் நீரே
– வானம் திறந்தருளும்
சுய ஆடம்பரம் முற்றும்
சுட்டெரிக்க வேணுமே
தயவு தாழ்மையினாவி தந்தருள வேணுமே
மாயமான யாவினின்றும்
மனமதை பேணுமே
ஆயனே அடியார்களின் அடைக்கலமே
– வானம் திறந்தருளும்
அதிகமதிமன்பில்
அமிழ்ந்து அனுதினம்
புதிய நாவுகளாலும் புகழ்ந்தும்மைப் போற்றிட
அதிசயமே அகத்தின்
குறைகளகற்றியே
இது சமய முன்னத பெலனீந்திடும்
– வானம் திறந்தருளும்