நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சப்தமாய்ப் பாடி சத்துருவை

Sapthamaayp Paati Saththuruvai

Fr. S. J. Berchmans

சப்தமாய்ப் பாடி சத்துருவை

சங்கிலியால் கட்டுவோம்

நித்தம் நித்தம் கர்த்தர் நாமம்

பாடி உயர்த்திடுவோம்

இராஜா இயேசு ஜீவிக்கின்றார்

இரத்தம் சிந்தி ஜெயம் தந்தார்

புதுப்பாடல் பாடி மகிழ்வோம்

புனிதர்கள் சபையிலே

துதிபலி எழும்பட்டும்

ஜெயக்கொடி பறக்கட்டும்

எழுப்புதல் தேசத்தில்

பொழுதுபோல் உதித்தது

– இராஜா

உண்டாக்கினாரே நம்மை

உள்ளம் மகிழட்டும்

ஆளுநர் அவர்தானே

இதயம் துள்ளட்டும்

எழுப்புதல் தேசத்தில்

பொழுதுபோல் உதித்தது

– இராஜா

தமது ஜனத்தின்மேலே

பிரியம் வைக்கின்றார்

வெற்றி தருகிறார்

மேன்மைப்படுத்துவார்

எழுப்புதல் தேசத்தில்

பொழுதுபோல் உதித்தது

– இராஜா

கர்த்தரை உயர்த்தும் பாடல்

(நம்) வாயில் இருக்கட்டும்

வசனம் என்ற போர்வாள்,

(நம்) கையிலே இருக்கட்டும்

எழுப்புதல் தேசத்தில்

பொழுதுபோல் உதித்தது

– இராஜா