பாடல்
சாந்தி தேடி அலைந்தேன் உலகில்
Saanthi Thaeti Alainthaen Ulakil
Sirkali Yesuprakasam
சாந்தி தேடி அலைந்தேன் உலகில்
சாந்த சொரூபி என்னை நாடி வந்தார்
மாந்தர்க்கெல்லாம் சாந்தி வழங்கும்
மாதேவன் இயேசு பாதம் பணிந்தேன்
சத்தியம் ஜீவன் வழியும் அவரே
சர்வமும் இயேசு திருவருளே
உத்தமர் இயேசுவின் நாமத்தை வாயால்
உச்சரித்தா உள்ளத்தில் சாந்தி சாந்தி
– சாந்தி
நித்தமும் நம்மை காப்பவர் இயேசு
நித்திய வாழ்வில் சேர்ப்பவர் இயேசு
கர்த்தராம் இயேசுவின் சிலுவை காட்சி
கண்களால் கண்டேன் இதயத்தில் சாந்தி
– சாந்தி
பொய்யான தெய்வத்தை
நாடி நான் அலைந்தேன்
மெய்யான தெய்வம்
என்னை தேடி வந்தார்
ஐயத்தில் உண்மையான
தெய்வம் யாரென்ற
ஐயத்தால் உள்ளத்தின்
அமைதியை இழந்தேன்
மனிதனை புனிதனாய் மாற்றிட வந்த
மாதேவன் இயேசுவால்
சாந்தி நான் அடைந்தேன்
– சாந்தி