பாடல்
சாலேமின் ராஜா இயேசு சாரோனின் ரோஜா
Saalaemin Raajaa Yesu Saaronin Rojaa
Sirkali Yesuprakasam
சாலேமின் ராஜா இயேசு
சாரோனின் ரோஜா
சஞ்சலம் வருத்தம் தீர்த்திடுவார்
சாப பாவம் நீக்கிடுவார்
சாந்தம் சமாதானம் தந்திடுவார்
இருவர் மூவர் அவர் பெயரால்
கூடும் இடத்தில் அவர் இருப்பார்
இயேசு நாமத்தில் கேட்பதெல்லாம்
எதையும் தவறாமல் தருபவராம்
அழைத்தால் வருவார் கேட்டால் தருவார்
அன்பாய் என்றும் துணையிருப்பார்
– சாலேமின்
நோய்கள் பேய்கள் விரட்டிடுவார்
நொந்த உள்ளத்தை தேற்றிடுவார்
கண்ணீர் கவலை மாற்றிடுவார்
கண்ணின் மணிபோல் காத்திடுவார்
ஜெபத்தை கேட்பார்
ஜெயத்தை கொடுப்பார்
துதியில் வாசம் செய்திடுவார்
– சாலோமின்