நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

புத்திக்கெட்டாத அன்பின் வாரீ பாரும்

Puththikkettatha Anpin Vaaree Paarum

புத்திக்கெட்டாத அன்பின் வாரீ பாரும்

உம் பாதம் அண்டினோமே தேவரீர்

விவாகத்தால் இணைக்கும் இருபேரும்

ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர்

ஆ ஜீவ ஊற்றே, இவரில் உம் நேசம்

நல் நம்பிக்கையும் வாழ்வு, தாழ்விலும்

உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம்

குன்றாத தீரமும் தந்தருளும்

பூலோக துன்பம் இன்பமாக மாற்றி

மெய் சமாதானம் தந்து தேற்றுவீர்

வாழ்நாள் ஈற்றில் மோட்ச கரையேற்றி

நிறைந்த ஜீவன் அன்பும் நல்குவீர்